தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக தீவன சோள விதைகள்
1 min read
Free fodder maize seeds to farmers in Tenkasi district
17.10.2024
தென்காசி மாவட்டத்தில் நீர்பாசன வசதியுள்ள விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய தீவன சோள வகைகள் மற்றும் வேலி மசால் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் நீர்பாசன வசதியுள்ள விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 0.25 ஏக்கர் (25 சென்ட்) பசுந்தீவனம் வளர்க்க தேவைப்படும் 0.375 கிலோ தீவன சோளவிதைகள் மற்றும் 0.5 கிலோ வேலிமசால் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளி குறைந்தபட்சம் 2 கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். நீர்பாசன வசதியுள்ள நிலம் குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். அந்நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பயிர்சாகுடி செய்து பராமரிக்க விருப்பம் தெரிவிக்கவேண்டும். குத்தகை நிலம் வைத்திருக்கும் விவசாயி குறைந்தது 3 வருடங்களுக்காவது குத்தகை ஒப்பந்த பத்திரம் வைத்திருக்க வேண்டும். அந்நிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பயிர்சாகுடி செய்து பராமரிக்க விருப்பம் தெரிவிக்கவேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அதிக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை பயிரிடலாம். சிறு குறு குறு விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகள் கடந்த மூன்று வருடங்களில் இம்மாதிரியான திட்டங்களில் பயனடைந்திருக்க கூடாது.
மானாவரியில் தீவன சோளம் மற்றும் காராமணி வளர்த்தல் திட்டத்தின்கீழ் 70 ஏக்கரில் நீர்பாசன வசதியற்ற விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ஒருநபருக்கு 0.50 ஏக்கர் (50 சென்ட்) பசுந்தீவனம் வளர்க்க தேவைப்படும் 6 கிலோ தீவன சோள விதைகள் மற்றும் 2 கிலோ காராமணி விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. நீர்பாசன வசதியற்ற நிலம் குறைந்தபட்சம் 0.5 ஏக்கர் (50சென்ட்)நிலம் மற்றும் கால்நடைகள் வைத்திருக்க வேண்டும், அந்நிலத்தில் மானாவாரி முறையில் பயிர்கள் சாகுபடி செய்ய விருப்பம் பயிர்கள் சாகுபடி தெ தெரிவிக்கவேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் அதிக கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் அதிகபட்சமாக சமாக ஒரு ஹெக்டேர் வரை பயிரிடலாம். சிறு குறு குறு கு விவசாயிகள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மின்சார வசதியுடன் கூடிய இயந்திர புல் அறுக்க்கும் கருவி (PowerDriven Chaff Cutter) திட்டத்தின்கீழ் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்கு 30 பயனாளிகளுக்கு இயந்திர புல் நறுக்கும் கருவி ) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி ஒரு அலகிற்கான இயந்திர புல்நறுக்கும் 32,000/ கருவ ஆகும். இதில் அரசு 50% மான்யம் ரூ.16,000/ அதிகபட்சமாக வழங்கப்படும். மீதித்தொகை பயனாளியின் பங்களிப்பாகும். பயனாளிகள் குறைந்தபட்சம் இரண்டுகால்நடை கள் மற்றும் பயிர்கள் சாகுபடி செய்யமின்சார வசதியுடன் கூடிய நிலப்பரப்பு 0.5 ஏக்கர் வைத்திருக்க வேண்டும். பயனாளி கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இதைப் போன்ற திட்டத்தின்கீழ் ஏற்கனவே பயனடைந்தவராக இருத்தல் கூடாது. சிறுகுறு விவசாயிகள்/ பெண் விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு’ செய்யப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 50% (சரக்கு மற்றும் சேவை வரி சேர்த்துபங்குத் தொகையினை செலுத்துவதற்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட
கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் (மு.கூ.பொ) கால்நடை பராமரிப்புத்துறை, நெல்லைஎன்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் ஏ.கே.
கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.