தென்காசியில் செவிலியர் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம்
1 min read
Nurses Development Association protest in Tenkasi
5.11.2024
தென்காசியில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
திருச்சியில் பணிமுடித்து வீட்டிற்கு சென்ற செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் வண்புனர்வில் ஈடுபட்ட சமுக விரோதி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
பெருந்திரள் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் ஜெ.பெலிக்ஸ் மோனிகா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பிராங்ளின், கனகலட்சுமி, மாரீஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமார் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினா். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் பி.கே மாடசாமி போராட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரை யாற்றினார்.
தென்காசியில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில். ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும் வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாநில பொருளாளர் ஞா.ஸ்டான்லி மாவட்ட தலைவர் க.பாலசுப்பிர மணியன் தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் க.மார்த்தான்ட பூபதி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் த.சேகர் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாப்புராஜ் தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் சே. ராதா கிருஷனை் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் க.துரைசிங் போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார் மாவட்ட பொருளாளர் கே.சத்யா அனைவருக்கும் நன்றி கூறினார்.