July 8, 2025

Seithi Saral

Tamil News Channel

ராஜபாளையத்தில் லத்தியை பறித்து போலீசை தாக்கிய 6 பேர் கைது

1 min read

6 people were arrested for attacking the police in Rajapalayam

16.11.2024
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெருவில் புகார் மனு தொடர்பாக வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றனர்.

அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்களை தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் எச்சரித்தனர். இருப்பினும் அந்த கும்பல் அத்துமீறி நடந்து கொண்டதோடு இசக்கி, ராம்குமார் வைத்திருந்த லத்தி கம்புகளை பிடிங்கி அவர்களையே சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த 2 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்கள் லத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அசோக்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ்காரர்களை தாக்கியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கீழ பால்பாண்டி (வயது 31), கிளிராஜன் (24), பாஞ்சாலி ராஜா (40) பாண்டியராஜ்(22) ஆகிய 4 பேரை தட்டிதூக்கி கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த ராமநாதன் மகன் சரவணகார்த்திக்(33), சேவகன் மகன் முத்துராஜ்(34) ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.