June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் காவல்துறைக்கு தேர்வான இந்து வாலிபர்- கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்பு

1 min read

Hindu youth selected for Pakistan Police – takes charge as Superintendent

11.12-/2024
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் இந்து சமூகத்திலிருந்து இளைஞர் ஒருவர் அந்நாட்டின் குடிமைப் பணிகள் தேர்வில் இந்தாண்டு வெற்றிபெற்று காவல்துறைக்கு தேர்வாகியுள்ளார். பாகிஸ்தான் போலீஸ் படையில் (பிஎஸ்பி) இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையின சமூகங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமமான பாதின் பகுதியைச் சேர்ந்த ராஜேந்தர் மேக்வாருக்கு அந்நாட்டின் பெருநகரங்களில் ஒன்றான ஃபைசலாபாத்தின் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

“பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாரபட்சத்துடன் நடத்தப்படும் சூழல் நிலவுவதாகவும், இந்த நிலையில், ஹிந்து இளைஞரின் பணி நியமனம், சிறுபான்மையின மக்களின் பிரச்னைகளை களைய உதவும்” என்று இந்து சமூக தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் 24 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையில், சுமார் 2 சதவிகிதம் இந்துக்கள். இந்த நிலையில், “பிற அரசுத் துறைகளைப் போல அல்லாமல் காவல்துறையில் ஓர் அங்கமாக இருப்பதன் மூலம், மக்கள் பிரச்னைகளை நேரடியாக எதிர்கொள்ள முடிகிறது” என தெரிவித்துள்ளார் ராஜேந்தர் மேக்வார். அவரது பணி நியமனத்தை காவல்துறை உயரதிகரிகளும் வரவேற்றுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.