குற்றாலம் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம்
1 min read
Chariot procession of the five idols at the Courtallam temple
9.1.2025
தென்காசி மாவட்டம் குற்றாலம்
திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு
பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது.
குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில் திருவாதிரை திருவிழாவில் நேற்று காலை பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். வரும் 13ம் தேதி ஆருத்ரா தரிசன தாண்டவ தீபா ராதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திரு விழா வெகு விமரிசையாக நடப் பது வழக்கம், இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த விழாவில் நேற்று காலை ஐந்து தேர்கள் ஓடும் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் கோலாகல மாக நடைபெற்றது.அதில் விநாயகர், முருகர், நடராஜர், குற் றாலநாதர், குழல்வாய் மொழி அம்மன் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்பட்டது.
திருவாதிரை விழாவிற்கான சிறப்பு பூஜைகளை மகேஷ் பட்டர் தலைமையில் பிச் சுமணிபட்டர், கணேசன் பட்டர், ஓதுவார் சங்கரநா ராயணன் ஆகியோர் நடத் தினர். சிவனடியார்களின் சிவபூதகண வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் யக்ஞ நாராயணன், அகஸ்தியர் சத்சன்மார்க்கம் முத்துக் குமாரசாமி, முன்னாள் அறங்காவலர் வீரபாண் டியன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா, குற்றாலம் வர்த்தக சங்க தலைவர் காவையா செயலாளர் அம்பலவாணன், பொருளாளர் ஜோதிமுருகன், துணைத் தலைவர்கள் ராஜ்மெஸ் வேல்ராஜ், இசக்கி, இணை செயலாளர்
பண்டாரசிவன், துணை செயலாளர் நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர் கள் பங்கேற்றனர்.
வரும் 11ம்தேதி காலை 10 மணிக்கு மேல் சித்திர சபையில் நடராஜ மூர்த் திக்கு பச்சை சாத்தி தாண டவ தீபாராதனை நடக்கி றது முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திர சபையில் நட ராஜமூர்த்திக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராத னையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளுக்கான
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் சுப்பு லெட்சுமி, உதவி ஆணையர் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி டிஎஸ்பி தமிழினியன், குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீ சார் மற்றும் தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான வீரர்கள் செய்திருந்தனர்.