July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றம் நாளை கூடுகிறது- 62 சட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகிறது

1 min read

Parliament meets tomorrow – 62 bills to be tabled

31.1.2025

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2025-26ம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (31-ந்தேதி) தொடங்குகிறது.

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத் தொடா்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிர்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். மேல்சபையில் இந்த விவாதம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விவாதங்களுக்கு மேல் சபையில் பிப்ரவரி 6-ந்தேதி பிரதமா் நரேந்திர மோடி பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் 9 அமா்வுகளுடன் பிப்ரவரி 13-ந்தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்ட அமா்வு மார்ச் 10-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 27 அமா்வுகள் இடம்பெற உள்ளன.

சனிக்கிழமை தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி சலுகைகள் கிடைக்குமா? என்ற எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி வரம்பு குறித்த எதிர்பார்ப்பு மாத சம்பளம் வாங்குபவர்களிடம் இருக்கிறது. ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு இருந்தாலும் கூட வரி சலுகை எதுவும் கிடைக்காது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் , வக்பு திருத்தம் உள்பட 62 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடங்கப்படுவதாக எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அவையை நடத்த விடாமல் முடக்கும் என்பதால் மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.