June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழம்பவைத்த கேன்சர்/ நகைச்சுவை கதை /தபசுகுமார்

1 min read

Cancer that made my eyes water/comedy story/Tapasukumar

24.3.2025
கண்ணாயிரம் புதுவையிலிருந்து தாம்பரத்துக்கு ரெயிலில் சென்றபோது பாதிவழியில் இறங்கினார். தண்வாளத்தில் வெடி குண்டு வைத்தவனை அவர் போலீசில் பிடித்துக்கொடுக்க அவன் கள்ளநோட்டு கும்பலின் தலைவன் என்பதும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்தது. அவன் ரூ.10 கோடி கேட்டு கடத்திவைத்திருந்த சிறுவனை போலீசார் மீட்டனர்.
கண்ணாயிரம் இதை பெரிதாக நினைக்காமல் கள்ளநோட்டு கும்பல் தலைவன் தன்னிடம் ஏமாற்றிய நூறு ரூபாய் நோட்டை எப்படியாவது அவனிடம் வாங்கிவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
அவர் பிளாஸ்டிக் வாளியில் வைத்திருக்கும் தண்ணீர் பற்றி டி.ஐ.ஜி கேட்டபோது இது தாமிரபரணி தண்ணீர் இதில் தாமிரம் இருக்கு
இதை தாம்பரத்தில் உள்ள ஆபீசில் கொடுத்து பிரித்தெடுக்கணும் அதில் கிடைக்கும் ரூபாயை ஜவுளிக்கடைக்காரரிடம் வாங்கிய கடனுக்கு கட்டணும் என்று கண்ணாயிரம் சொல்ல அவரது அப்பாவிதனத்தை எண்ணி அனைவரும் சிரித்தனர்.
டி.ஐ.ஜி அவரிடம், “கண்ணாயிரம் உன்னை யாரோ அப்படி சொல்லி ஏமாத்தி இருக்காங்க.. அப்படி தாம்பரத்திலே தாம்பரம் பிரிச்சி எடுக்கிற ஆபீசு இல்ல.. நீங்க சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையவனை கண்டுபிடிச்சி கொடுத்திருக்கீங்க உங்களுக்கு போலீஸ் அறிவித்த பத்து லட்ச ரூபாய் கிடைக்கும்/ அதைவச்சி கடனை அடைங்க” என்று சொன்னார்.
சிறுவனை மீட்க உதவியதால் கண்ணாயிரத்துக்கு பத்து கோடி ரூபாய் கொடுக்கிறேன். கடனை அடைங்க என்று சிறுவனின் தந்தை சொல்ல.. கண்ணாயிரம் விழித்தார். ஏங்க..எனக்கு என்பணம் கிடைச்சா போதுங்க.. இந்த பய எங்கிட்ட நூறு ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து ஏமாத்திட்டான்
.அவங்கிட்ட நல்ல நூறு ரூபாய் நோட்டு வாங்கி கொடுங்கய்யா என்று கெஞ்சினார்.
உடனே டிப்டாப் வாலிபர் கோபமாக கண்ணாயிரத்தைப் பார்த்து, யோவ் .. நீரு அறுபது ரூபாதான தந்தீர்.. அதுவும் கிழிஞ்ச நோட்டு..செல்லாத நோட்டை கொடுத்து என்னை ஏமாத்திட்டியரு.. உமருக்கு ஒரு ரூபாகூட தரமாட்டேன் என்க, கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. நான் கிழிஞ்ச நோட்டுதான் கொடுத்தேன் நீகள்ள நோட்டை கொடுத்து என்னை மாட்டிவிட்டுட்டா.. ஊர் ஊரா உன்னை தேடி அலைஞ்சேன்.. எனக்கு நல்ல நூறு ரூபாய் நோட்டு தரமாட்டியா.. என்று கேட்டார்.
டி.ஜ.ஜி.. ஏங்க நூறு ரூபாயை விடுங்க.. அவன் ஜெயிலுக்குப் போகப் போறான்.. என்றார்.
அப்போது பூங்கொடி, சுடிதார சுதா, பயில்வான், இறைச்சிக் கடைக்காரர் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு காரில் வந்து இறங்கினர்.
பூங்கொடி அழுதுகொண்டே உள்ளே வந்தார். என் புருசன் நல்லவர்.. எந்த தப்பும் பண்ணமாட்டார். கொஞ்சம் லூசுமாதிரி பேசுவாரு.. தாம்பரத்துக்கு உண்மையிலே டிக்கெட் எடுத்துட்டு ரெயிலில் வந்தவரை பிடிச்சி உள்ளே போட்டுவிட்டீர்களே.. நான் என்ன செய்வேன் என்று அழுதார்.
அதைப்பார்த்து கண்ணாயிரமும் அழ, போலீசாருக்கு என்ன சொல்வதென்றே தெரியல.. கண்ணாயிரத்திடம் டி.ஐ.ஜி.. நீ ஏய்யா அழுற என்று கேட்க,அதற்கு அவர், என் பொண்டாட்டி பூங்கொடி அழுறா.. அதான் நானும் அழுறன் என்றார்.
ஏம்மா நீ அழுற என்று பூங்கொடியிடம் டி.ஐ.ஜி. கேட்டபோது அவர் கண்களை கசக்கியபடி.. என் புருசனு போலீசில புடிச்சிவச்சிருக்கீயள.. அதான் அழுறேன் என்றார்.
அதற்கு அவர்..அழாத.. அழாத..உன் புருசனை பிடிச்சி வைக்கல.. அவர்தான் ஒரு பெரிய தீவிரவாதியை பிடிச்சி வைச்சிருக்காரு.. அவருக்கு பெரிய அளவு பரிசு கொடுக்கப் போறோம் என்றார்.
பூங்கொடி அப்படியா ..யாரும் சொல்லலையே என்றவர் கண்ணாயிரத்தை பாசமுடன் பார்த்தார்.
அப்போது சுடிதார் சுதா வேகமாக உள்ளேவர கண்ணாயிரம் அவரைப் பார்த்து, சுடிதார் சுதா.. நான் இங்கே இருக்கேன். படுபாவிபய எங்கிட்ட சிக்கினான். பேரு சேகராம்.. உன்னை உண்மையா காதலிச்சானாம்.. உனக்கு கேன்சருன்னு தெரிஞ்சதும் உன்னைவிட்டுட்டு ஓடிட்டானாம். என்னா கதைவிடுறாம். உனக்கு கேன்சருன்னு பொய்சொல்லுறான்.. உனக்கு கேன்சர் இல்லைதானே.. நீ நல்லாதான இருக்க.. பொய் சொல்லாத பொய் சொல்லாதன்னு அவன் வயித்துல நான் நாலு குத்தி குத்திவிட்டேன்.. எனக்குதான் கைவலிக்குது என்றார்.
அதைக்கேட்டு சுடிதார்சுதா அழுதார். அதைக்கண்டு கண்ணாயிரம், ஏன்..ஏன்..அழுற..உனக்கு கேன்சருன்னு அந்தப் பய பொய் சொல்லிட்டானேன்னு அழுறீயா.. நீயும் அவன் வயித்துல இரண்டு குத்து குத்து .. அப்பதான் சரிவருவான் என்றார். அதைக் கேட்டு சுடிதார்சுதா மேலும் அழ,பயில்வான், இறைச்சிக்கடைக்காரர் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்குள் வந்தனர். என்னாச்சு சுடிதார்சுதா.. ஏன் அழுற என்று அவர்கள் கேட்க, கண்ணாயிரம் பதில் சொன்னார்
ஏங்க.. எங்கிட்டஇந்த கள்ளநோட்டு கொடுத்து ஏமாத்தின வாலிபர் சேகர் ரெயில் தண்டவாளத்திலே குண்டுவைக்கும் போது நான்பாத்து அவனை பிடிச்சி போலீசில கொடுத்திட்டேன். அவன் என்னடான்னா.. சுடிதார் சுதாவை உண்மையா காதலிச்சதாகவும் அவளுக்கு கேன்சர் என்றவுடன் விட்டுட்டு ஓடிட்டதாகவும் சொல்லுறான். நல்லா இருக்கிற சுடிதார்சுதாவுக்கு கேன்சருன்னு அவன் சொல்லுறது பொய்தானே என்று கண்ணாயிரம் கேட்க.. சுடிதார்சுதா குலுங்கி குலுங்கி அழுதார். உடனே கண்ணாயிரம் பாத்தீங்களா கேன்சருன்னு பொய் சொன்னா அழதான செய்வாங்க.அதான் அழுறாங்க என்க, இறைச்சிக்கடைக்காரரும் பயில்வானும் பதில் சொல்லாமல் நின்றனர்.
டி.ஜ.ஜியிடம் சுடிதார் சுதாவை பெண் போலீசார் அழைத்துச் சென்றனர். டி.ஐ.ஜி அவரிடம் விசாரித்தார். அப்போது டிப்டாப் வாலிபர் குறித்து பேசினார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்தேன். கடற்கரைக்கு தோழிகளோடு சென்று குளித்தபோது கடல் அலையில் சிக்கியபோது இந்த டிப்டாப் வாலிபர் தன்னை காப்பாற்றினார். அதன்பிறகு அடிக்கடி இருவரும் சந்தித்து பேசினோம்.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம்.ஆனால் அவருக்கு பணத்தின் மேல் ஆசை அதிகம். எப்படியாவது கோடி கோடியா சம்பாதிக்கணும்.. அதுதான் ஆசை என்பார்.
நான் அவரை கண்டிப்பேன். நல்லமுறையில் சம்பாதித்து எளிமையா வாழுறதுதான் நல்லது என்பேன். அவர் கேட்கவில்லை. தவறான வழியில் போயாவது சம்பாதிக்கணும்.பணம் இருந்தாத்தான் எல்லோரும் மதிப்பாங்கன்னு சொன்னாரு.நான் சொன்ன எதையும் அவர் கேட்கல..ஒருநாள் நாங்க கடற்கரையிலே பேசிக்கிட்டு இருந்தப்ப எனக்கு திடீரென்று எனக்கு ரத்தவாந்தி வந்தது
டாக்கருக்கிட்டபோய் பரிசோதித்த போது.. கேன்சருன்னு தெரியவந்தது. அது தெரிந்த பிறகு அவர் என்னைப் பார்க்கவே வரலை.. எனக்கு கேன்சருன்னு அவரைத் தவிர வேறு யாரூக்கும் தெரியாது. நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்க.. அந்த வலியோட நான் சிரிச்சிக்கிட்டே செத்துப் போறன் என்று சுடிதார் சுதா அழுதபோது டி.ஐ.ஜியும் கண் கலங்கினார். நான் யாரிடமூம் சொல்ல மாட்டேன் என்றார். டிப்டாப் வாலிபர் சேகரரை போலீசார் அங்கே அழைத்துவந்தார். அவனைக் கண்டதும் சுடிதார் சுதா கதறி அழுதது எங்கும் எதிரொலித்தது.(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.