கீழப்பாவூர் ஒன்றியத்தில்பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
1 min read
Keelappavur: Appreciation ceremony for teachers who have completed their work
29/4/2025
கீழப்பாவூர் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா அருணாப்பேரியில் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் மன்ற தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் தங்கதுரை வரவேற்று பேசினார். மன்ற ஒன்றிய செயலாளர் ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் சீனிவாசகம், டேவிட்சன், அருள் பாண்டியராஜ், ஜேம்ஸ் பிரிட்டோ, ஜெயா செல்வி கெப்சி பாய்,வசந்த மல்லிகா, ராமலட்சுமி, பேபி விக்டோரியா, அங்கயற்கன்னி, மரிய திரவியம் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கி பேசினார்.
.இவ்விழாவில் ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் கணேசன், வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ண பாரதி,ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயசிங், மாநில சட்ட செயலாளர் லட்சுமி குமரன், மாவட்ட பொருளாளர் சுந்தரவேல், ஆசிரியர் மன்ற நிர்வாகி அருள்மணி பாஸ்கர், இளம்பரிதி சண்முக சிங் மற்றும் முன்னாள் மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர்கள்,தர்மராஜ்,சங்கர், நாகராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயராணி அந்தோணி ராஜ், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், நிர்வாகிகள் காசிபாண்டியன்,சேர்மலிங்கம், முத்து பாண்டியன், மதன், ராஜசேகர், சீனிய்யா, ஏபிஎன் குணா, ராஜபாண்டியன், சண்முகசுந்தரம் (எ) தினேஷ்,; கேபிள் அஜித், அருணாசலம், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் ராஜதுரை அனைவருக்கும் நன்றி கூறினார்.
One attachment • Scanned by Gmail
ReplyReply allForwardAdd reaction |