June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது

1 min read

Man who spied for Pakistan arrested in Rajasthan

2.5.2025
காஷ்மீர் தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சால்மரில் வசிக்கும் பதான்கான் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது. ஒரு மாதத்துக்கு முன்பே அவர் விசாரிக்கப்பட்டார். தற்போது தான் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பதான்கான் 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று அங்கு புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை அவர் அளித்துள்ளார். பணத்துக்காக அவர் உளவு பார்த்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.