June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

1 min read

Tenkasi District Police Inspectors Transfer.

4.5.2025
தென்காசி மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமானி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் பிரிவுகளில் 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி தென்காசி, மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர்கள் விவரம் வருமாறு:

தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளராக தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த
சுரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார், பதவி உயர்வு பெற்ற தென்காசி மாவட்ட இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பதவி உயர்வு பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கமலா தேவி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,
பதவி உயர்வு பெற்ற நெல்லை மாநகரத்தை சேர்ந்த பாத்திமா பர்வீன் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா இன்ஸ்பெக்டர் காளிராஜன் தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்திற்கும், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தென்காசி மாவட்ட பயங்கரவாத தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கும், தச்சநல்லூர் முத்துகணேஷ் குற்றாலம் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு விஜி தென்காசி மாவட்ட வரதட்சணை தடுப்புப் பிரிவிற்கும், , பதவி உயர்வு உயர்வு பெற்ற நெல்லை உளவுப்பிரிவு சிவராமகிருஷ்ணன் செங்கோட்டை காவல் நிலையத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். புளியங்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமானி பிறப்பித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.