July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

எல்லையோர மாநில முதல்- மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

1 min read

Amit Shah holds talks with Chief Ministers of border states

7.5.2025

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில் எல்லையோர மாநில முதல்- மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதல்- மந்திரிகளுடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.