அச்சன்புதூர் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
1 min read
Achanputhur ganja dealer arrested under the Goonda Act
5.6.2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்த கஞ்சா வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், தென்காசி மதுவிலக்கு காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் பட்டாணியார் தெருவை சேர்ந்த மைதீன் பாட்சா என்பவரின் மகன் அபுபக்கர் சித்திக் (வயது 26) மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில், தென்காசிஸமாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறை சிறையில் அடைக்கப்பட்டார்.