நெல்லை- கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
Nellai – Youth arrested under the Gangster Act in attempted murder, ganja case
5.6.2025
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ஊத்துமலை, நெடுங்கல் தெருவை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்(எ) கருவா கார்த்திக் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, கஞ்சா, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், கார்த்திக் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், கார்த்திக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (4.6.2025) அடைக்கப்பட்டார்.