June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

புதிய தொழில்நுட்பத்துடன் 12 ராக்கெட்கள்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

1 min read

12 rockets with new technology; ISRO chief Narayanan informed

27.7.2025
”இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 12 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன,” என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
வரும் 30ம் தேதி, நாசாவும், இஸ்ரோவும் இணைந்து, ‘சிந்தடிக் அப்ரசர் ரேடார்’ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் மேக மூட்டம், மழை போன்ற எந்த சூழலிலும் பூமியை படம் பிடிக்கும் திறன் கொண்டது. நிலநடுக்கம், பேரிடர் குறித்த தகவல்களை தரக்கூடிய செயற்கைக்கோளாகவும் உள்ளது. ஜி.எஸ்.எல்.வி., வரிசையில், 18வது ராக்கெட் இது.
இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 34 விதமான புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட செயற்கைக்கோள்களுடன், 12 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் இங்கிருந்து ஏவப்படுகிறது.

பிரதமர் ஒதுக்கீடு செய்த, 20,000 கோடி ரூபாயில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ககன்யான் திட்ட மூலம் இந்தியாவில் தயாரித்த ககன்யான் ஜி1 என்ற செயற்கைக்கோளில், ரோபோ வைத்து, இந்த ஆண்டு டிச., மாதம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிந்துார் ஆப்பரேஷனுக்கு பின், இந்திய மக்களின் பாதுகாப்பு தேவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். ‘சிந்துார் ஆப்பரேஷனுக்கு’ நம்முடைய சேட்லைட் துல்லியமான தகவல்களை கொடுத்தது. விண்வெளி துறையில், இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *