அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் மலரும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min read
Next year, AIADMK rule will definitely flourish – Edappadi Palaniswami speech
9.8.2025
சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினை அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நான் சேலம் மாவட்டத்தில் இருக்கின்றவன். நம்முடைய மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நான் இருக்கின்ற இந்த கால கட்டத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தது மகிழ்ச்சி அடைகிறேன். 2011-2021 வரை சேலம் மாவட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர செய்தோம். குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து ஆங்காங்ககே இருக்கின்ற ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் பெய்கின்ற நீரை சேமித்து கோடை காலத்தில் பயன்படுத்த முடியும் என்கிற திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஏரிகளில் அள்ளப்படும் வண்டல் மண் நம்முடைய விளை நிலங்களில் இயற்கை உரங்களாக பயன்படுத்தினோம்.
அதேபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தோம். நம்முடைய விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்தோம். இப்படி விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை செயல்படுத்தினோம். நம்முடைய மாவட்டம் விசை தறி நிறைந்த பகுதி. இன்றைய தினம் விவசாய தொழில் நலிவடைந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆட்சியினுடைய நிர்வாக திறமையற்ற காரணத்தினால் இந்த 2 தொழில்களும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருகின்றபோது இந்த விவசாயிகளும், விசை தறிதொாழிலாளர்களுக்கும் உதவி செய்யப்படும். மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது.
எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்.
எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார்.
வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்.
சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.
தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.