June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

“தீபாவளியில் மக்களுக்கு மிகப் பெரிய பரிசு” — பிரதமர் மோடி சுதந்திர தின அறிவிப்பு

1 min read

“The biggest gift to the people on Diwali” — PM Modi’s Independence Day announcement

15.8.2025
சுதந்திர தின விழா காலை 7.30 மணிக்கு தொடங்கியது. ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழாவுக்கு காலையில் பிரதமர் வருகை தந்த போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.

தொடர்ந்து பிரதமருக்கு டெல்லி பகுதியின் ராணுவ தளபதி அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் பிரதமரை காவலர் மரியாதை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார். இந்த மரியாதையை 3 படைகள் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து தலா 24 பேர் என மொத்தம் 96 பேர் பிரதமருக்கு அளித்தனர். ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்கியது.

அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்றார். அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜநாத் சிங் தலைமையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் முன்னிலையில் முப்படைகளின் தளபதிகள் பிரதமரை மீண்டும் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தீபாவளியை, நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். இந்த தீபாவளியில் நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசைப் பெறுவார்கள்… அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம்.
இது நாடு முழுவதும் வரி சுமையைக் குறைக்கும். தீபாவளிக்கு முன்னதாக இது ஒரு பரிசாக இருக்கும். அதற்கான குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி, மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும். இது சாமானிய மக்களுக்குப் பொருட்களின் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைக்கும். இதனால் நமது சிறுதொழில் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாக கிடைக்கும். இது நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்”
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக கூறிய அவர், ஏராளமான வரிகள் மற்றும் உள்ளூர் வரிகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி ஆட்சியைக் குறிப்பிட்டு. அரசாங்கம் நாடு முழுவதும் வரி சுமையைக் குறைத்து வரி செயல்முறையை எளிதாக்கியது என்று கூறினார்.

ஜிஎஸ்டி 2017ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மறைமுக வரி ஆட்சியின் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, இந்த மாற்றங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார். மறுஆய்வுக்காக ஒரு உயர் அதிகாரக் குழு அமைக்கப்பட்டது, மேலும் மாநிலங்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அரசாங்கம் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைத் தயாரித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-
“இன்று, 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அமைப்பு பிறந்தது என்பதை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS). தேச கட்டுமானத்திற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன் அத்தியாயம். ‘வியாக்தி நிர்மான் சே ராஷ்ட்ர நிர்மான்’ என்ற உறுதியுடன், மா பாரதியின் நலனை நோக்கமாகக் கொண்டு, ஸ்வயம்சேவகர்களே நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், RSS உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம். இது 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது”
இவ்வாறுபிரதமர் மோடி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *