புஷ்கர் கால்நடை கண்காட்சிக்கு வந்த எருமை மாட்டின் விலை ரூ.23 கோடி!
1 min read
The price of a buffalo that arrived at the Pushkar cattle fair was Rs. 23 crore!
ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 3,028 குதிரைகள், 1,306 ஒட்டகம் உள்பட 4,300 கால்நடைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று தொடங்கும் நிலையில் முன்கூட்டியே நாடு முழுவதும் இருந்து பலர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வந்துள்ளனர். இதனை பார்க்க கூட்டம் கூடி வருகிறது.
இதில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்துள்ளது. ‘அன்மோல்’ என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் உள்ளது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த மாட்டின் விலையை கேட்டால் அசந்து போவீர்கள். ஆமாம் ரூ.23 கோடி.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், ‘இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இதற்கு ஒரு நாள் தீவனத்துக்கே ரூ.1,500 செலவாகிறது’ என்று பெருமையாக தெரிவித்தார்.
இதேபோல் ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரையும் கண்காட்சிக்கு வந்துள்ளது. உஜ்ஜைன் பகுதியில் இருந்து 600 கிலோ எடை கொண்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள எருமை மாடும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டுமல்ல உயரம் குறைந்த பசு மாடும் இந்த கண்காட்சிக்கு வந்துள்ளது.