June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

வளர்த்த மாநிலங்கள் பட்டியலில் பீகார் சேரும் – நிதிஷ் குமார் பெருமிதம்

1 min read

Bihar will join the list of developed states – Nitish Kumar proud

14.11.2025
243 தொகுதிகளுக்கு நடைபெற்ற பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் இன்று வெளியாகின.

இரவு 8 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளன. அதேநேரத்தில் பாஜக 76 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 56 இடங்களிலும் வெற்று தனிப்பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளன. இதனால், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்த வெற்றி குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில், மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்காக, மாநிலத்தின் அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரியாதைக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இந்த மகத்தான வெற்றிக்கு, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு நன்றி .

உங்கள் ஆதரவுடன், பீகார் மேலும் முன்னேறும். நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்ககளின் பட்டியலில் பீகார் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *