June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 லட்சம் கோவிந்த நாமம் எழுதிய பெண்ணுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

1 min read

VIP Break Darshan for the woman who wrote 10 lakh Govinda Namaams at Tirupati

17.11.2025
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனியைச் சேர்ந்தவர் நூத்தி பூஜா (வயது 24), ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.

அவர் நள்ளிரவு வரை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. மறுபுறம், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலை அழுத்தங்கள் காரணமாக அவர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டார்.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த ‘கோவிந்த கோடி’ திட்டத்தைப் பற்றி அறிந்தார். பூஜா, ஏழுமலையானின் பெயர்களை எழுத முடிவு செய்தார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் பெயர்களை எழுத விரும்பினாலும், அதிலிருந்து கிடைத்த மகிழ்ச்சியுடன் அவர் தொடர்ந்து 10 லட்சம் தடவை எழுதி முடித்தார்.

மொத்தம் 10,01,116 கோவிந்த நாமங்களை எழுதியுள்ள அவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்தை சிறப்பாக வழங்கியது.

தனது கணவர் அபிஷேக்குடன் திருமலைக்கு வந்த பூஜா, கோவிலில் முன் பகுதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

சுவாமியின் ஆசியுடன் முதல் கடபத்திலிருந்து அவரைத் தரிசனம் செய்யும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *