நாகர்கோவில்-தாம்பரம் இடையே 18-ந்தேதி சிறப்பு ரெயில்: நாளை முன்பதிவு
1 min read
Nagercoil-Tambaram special train on 18th: Bookings open tomorrow
16/1/2026
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு திரும்புகிறார்கள். காலையில் இருந்து பஸ் மற்றும் ரெயில்களில் பயணத்தை தொடர முன்பதிவு செய்துள்ளனர். 19-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. 18-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் (எண்.06160 ) புறப்பட்டு மறுநாள் (திங்கள்கிழமை) அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த அதிவேக சிறப்பு ரெயில் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.