மெக்சிகோவில் வன்முறை- இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
1 min read
Violence in Mexico: Indians advised to be cautious
24.2.2026
லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.
கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களை எரிப்பது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்களை எரிப்பது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மெக்சிகோ விமான நிலையங்களிலும் வன்முறை பரவியது. இதனால் முக்கிய நகரங்களில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அங்குள்ள இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்கள் தங்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் போன் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
பின்வரும் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது:
ஜாலிஸ்கோ, தமௌலிபாஸ், மைக்கோகன், குயிரெரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு 911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். +52 55 4847 7539 என்ற இந்திய தூதரகத்தின் உதவி எண்ணைய்யும் தொடர்பு கொள்ளலாம்.