தவெக குதிரை பேரம் நடத்துவதாக கவர்னரிடம் திமுக, அதிமுக அடுத்தடுத்து புகார்
1 min read
DMK and AIADMK lodge successive complaints with the Governor, alleging horse-trading by TVK.
4.7.2026
சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் அர்லேகரை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சந்தித்தனர். தவெக வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக கவர்னரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். மேலும், திமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் கவர்னரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
குதிரை பேரம், அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டிய விவகாரத்தில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர். திமுக மனு அளிப்பதற்கு முன்பாக அதிமுகவும் குதிரை பேர புகார் தொடர்பாக தமிழ்நாடு கவர்னரை சந்தித்து புகார் அளித்தது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கவர்னர் அர்லேகரை சந்தித்து இருந்தார்.
இந்த சந்திப்பின் போது, உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், ஒரு பெண் குழந்தை இடம் முறையின்றி நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அது குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். தவெக அரசுக்கு எதிராக இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக, பாஜக என எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி கவர்னரிடம் புகாரளித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.