இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
1 min read
India’s first private rocket is set to launch tomorrow
17.7.2026
‘ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பறக்கும் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான ‘காஸ்மிக் புளூம்’ மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.
விக்ரம்-1 என்பது 7 அடுக்கு உயரமான, பல நிலை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனமாகும். இது அனைத்து கார்பன் கலவை அமைப்புடன் கட்டப்பட்டது மற்றும் 3டி-அச்சிடப்பட்ட எந்திரங்கள் மற்றும் உயர் உந்துதல் திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் உந்துவிசை அமைப்புகளால் இயக்கப்படுகிறது.
350 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் சோதனை விமானம் 60 டிகிரி சாய்வில் 450 கிமீ சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தவகை ராக்கெட் மூலம் சில நூறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை ராக்கெட்டாகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.