Drugs worth Rs 27 crore seized in Chennai: 2 arrested
29.10.2024
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.