அவள் யாருக்கு? (ஆசிரியர் கடையம் பாலன்) தொடர் கதை பகுதி 19)
1 min read
Aval Yarukku? story By Kadayam Balan
சைவ விருந்து சிறப்பாக நடந்தது. விருந்து விழா முடிந்ததும் சென்னை நட்பு வட்டாரங்கள் ஒரு அறையில் கூடியது. அதில் தெய்வாவின் தந்தையும் இடம் பெற்று இருந்தார்.
அந்த நேரத்தில் தெய்வாவின் அக்காள்களுக்கு பார்த்த அந்த மாப்பிள்ளை அழகர்சாமி அங்கே வந்தான். அவனைப் பார்த்ததும் தெய்வாயின் நட்பு வட்டாரங்களுக்கு அதிர்ச்சி. மீண்டும் குடிபுகுந்த குடும்பத்தில் கலாட்டா செய்ய வந்திருக்கானோ என்று பயந்தனர். வலுக்கட்டாயமாக அந்த அறைக்குள் நுழைய முயன்ற அவனை சுரேஷ் தடுத்தான். ஆனால் தெய்வா குறுக்கிட்டு அவனை உள்ளே அனுமதித்தார்.
வாங்க என்று அன்போடு அழைத்தாள் தெய்வா. “நீங்களும் எங்களோட இருங்க. என்னதான் இருந்தாலும் எங்க மானத்தை காப்பாற்ற நீங்களும் முன்வந்தவங்கதானே. அதோட எங்க உறவுக்காரங்கத்தானே” என்றாள்.
அவனுக்கு அப்பா அருகே இருக்கை போட்டு அமர வைத்தாள்.
தெய்வா அழகர்சாமிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கண்ட சென்னை நட்பு வட்டாரங்களுக்கு அதிர்ச்சி. ஆபத்து காலத்தில உதவ முன்வந்ததாக கூறி அவனுக்காக தன் வாழ்க்கை தியாகம் செய்துடுவாளோ என்று பயந்தனர். அப்படி ஒரு வார்த்தையை அவள் சபையில் சொல்லும் முன் அவள் எண்ணத்தை அறிய வேண்டும் என்று சுரேஷ் நினைத்தான். ஒரு வேளை அவள் அப்படி எண்ணி இருந்தால் அதை அகற்ற பாடுபட வேண்டும் என்றும் கருதினான்.
எனவே தெய்வாவை சுரேசும், நித்யஸ்ரீயும் தனியாக அழைத்துச் சென்றனர்.
“என்ன தெய்வா, அந்த அழகர்சாமி இங்கே வந்திருக்கான். அவனுக்கு நீ திடீர்ன்னு கொடுக்கிற மரியாதையை பார்த்தா… அவனை உனக்கு பிடிச்சிருக்க மாதிரி தெரியுது-” என்றான் சுரேஷ்.
“பிடிச்சிருக்கா அல்லது நன்றிக்கடனுக்காக அவனை திருமணம் செய்ய விரும்பறியா?”- நித்யஸ்ரீ.
“நன்றிக்கடனுக்காக அவங்களிடம் இருந்து நீங்க எந்த உதவியையும் பெறல. அதனால் நன்றிக்கடனுக்காக அவனை திருமணம் செய்ய வேண்டாம்” -சுரேஷ்.
“ஒருவேளை அவனை உனக்கு பிடிச்சிருந்த சொல்லு. எனக்கு ஆட்சேபனை இல்லை” -நித்யஸ்ரீ.
“என்ன சொல்ற நித்யஸ்ரீ. அவனை நம்ம தெய்வாவுக்கா… ம்ஹ§ம் நான் மாட்டேன்” – சுரேஷ்
-&இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தபோதே அழகர்சாமி அங்கு வந்தான். “என்ன தெய்வா தனியா பேசிக்கிட்டு இருக்கீங்க..” கேட்டான் அழகர்சாமி.
“நீங்க தெய்வாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு வந்திருக்கீங்களோன்னு பேசிக்கொண்டிருந்தோம்” &நித்யஸ்ரீ
“திருமணமா? எனக்கும் தெய்வாவுக்குமா? என்ன சொல்றீங்க” – அழகர்சாமி.
“ஆமா நீங்கத்தானே மதுரையில இருந்து சென்னை வரை தெய்வாவை துரத்தி வந்தீங்க” – நித்யஸ்ரீ.
“ஆமா தெய்வா மேலே ஆசைப்பட்டது உண்மைதான். தெய்வா மேலே ஆசைங்கிறதவிட இவங்க வீட்டுக்கு மருமகனா ஆகணும்ன்னுத்தான் நினைச்சேன். நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப இவங்க பங்களாவை பார்திருக்கேன். அப்போ இவங்க எப்படி செல்வாக்கா இருந்தாங்க தெரியுமா? பின்னால இவங்க கஷ்டப்படறதை எங்க அம்மா சொன்னப்பதான் அவகளுக்கு உதவணும்ன்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இவங்க அக்காவை பெண் கேட்டோம். மூத்தவ கிடைக்காத வேதனையில் இரண்டாவது அக்காவையாவது கல்யாணம் செய்யலாம்ன்னு நினைச்சேன். அதுவும் நிராசையா போச்சு. அதனால்தான் கோபத்தில் எப்படியாவது இவளை கல்யாணம் செய்யணும்ன்னு நினைச்சேன். மதுரையை பொறுத்தவரைக்கு பல இடங்கள்ல முறைமாமன்னு சொல்லி வயசு வித்தியாசம் பார்க்காம அக்கா மகளையோ தங்கச்சி மகளையோ கட்டி வச்சிருவாங்க. இந்த வழக்கம் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மறைச்சிட்டு வந்தாலும், அப்படி ஒரு ஆசையிலத்தான் வயசு வித்தியாசம் பார்க்காம இவளை கல்யாணம் பண்ண நினைச்சேன். ஆனா சென்னைக்கு வந்து உலக நடப்பை எல்லாம் பார்த்தப்பிறகுதான் நான் நினைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரிஞ்சுது. தெய்வா மேலே ஆசை இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சேன். கடந்த வாரமே தெய்வாவை பார்த்து என்னை மன்னிச்சிடுமா, இனிமே உன் வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்னு சொல்லிட்டேன்.
அவா கூப்பிட்டதாலத்தான் இங்கே வந்தேன். எனக்கு தெய்வா வேண்டாம். அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளுக்கு செய்த பாவம். எத்தனையோ பெண்கள் வயசானாலும் கல்யாணம் ஆகாம இருக்காங்க. அப்படிப்பட்ட பெண்ணை பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்குவேன்.”
இவ்வாறு அழகர்சாமி கூறினான்.
கல்மனசையும் கரைய வச்சிடுவா தெய்வா என்று நித்யஸ்ரீ பெருமைப்பட்டுக் கொண்டாள்.
அதன்பின் அனைவரும் அந்த அறைக்கு வரவே… மீண்டும் தெய்வாவின் திருமண பேச்சு ஆரம்பமானது.
உங்களுக்கு முருகன் நல்லா உதவிகரமாக இருந்தாரே. அவரும் நல்ல நிலையிலத்தான் இருக்கார். அவரை பேசமாக நம் தெய்வாவுக்கு பேசி முடிச்சிடலாமே என்று லட்சுமி அம்மாள் தெய்வாவின் அப்பாவிடம் கேட்டார்.
முருகன், அது இல்லை….என்று பேச்சை இழுத்தான்.
அதற்குள் தெய்வா இடைமறித்தாள். “எனக்கும் அவருக்கும் கல்யாணமா? என்ன சொல்றீங்க?”
“தெய்வா உங்க வீட்டிலயும் முருகன் வீட்டிலயும் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க இரண்டு பேரும் பயப்பட வேண்டாம்” என்றாள் லட்சுமி அம்மாள்.
“அத்தை நாங்க பழகியதை தயவு செய்து களங்கப்படுத்தாதீங்க. நானும் அவரும் அப்படி எந்த நினைப்போடும் பழகல. அதோட அவருக்கும் என் பிரண்ட் சரண்யாவுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது.” என்றாள்.
“எனக்கு சரண்யாவை தெய்வாத்தான் அறிமுகம் செய்து வைத்தாள். நான் தொழில் விஷயமாக அடிக்கடி சரண்யாவை சந்திச்சேன். அப்போ எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஒரு சந்தர்ப்பத்திலே என்னை தற்செயலாக சரண்யாவின் பெற்றோர் பார்த்திட்டாங்க. அவங்களுக்கு என்னை பிடித்திருந்தது. அவங்க எண்ணத்தை தெய்வா மூலம் தெரிஞ்சிக்கிட்டேன். அப்பா&அம்மா அனுமதியோட கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்.” என்றான் முருகன்.
இங்கேயும் ஒரு உதவியா? என்று சென்னை வட்டாரங்கள் நினைத்தன.
“எல்லோருடைய கல்யாணத்தையும் தெய்வா முடிச்சி வச்சிட்டா. அவளோட கல்யாணம் என்னிக்கு? சீக்கிரம் முடியணும்” என்றாள் கமலா அம்மாள்.
“ஆண்டி எங்க பிரச்சினை இப்போதான் முடிஞ்சிருக்கு. எங்க அப்பாவும் உடல் ரீதியா மட்டுமல்ல மக ரீதியாகவும் பூரண குணம் அடைஞ்சிட்டாங்க. இனியே என் வாழ்க்கைய அவங்க பார்த்துக்குவாங்க.” என்றாள் தெய்வா.
“ஆமா இனிமே எனக்கு வேலையே தெய்வாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதுதான். நீங்களும் நல்ல வரண் இருந்தா சொல்லுங்க. அடுத்த வருஷத்துக்குள்ள கண்டிப்பா கல்யாணம் நடந்துடும்” என்றார் தெய்வாவின் தந்தை.
தெய்வாக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கி விட்டது. தகுதியானவர்களின் பட்டியலை அவரவர்கள் புரட்ட தொடங்கி விட்டார்கள். அவளுக்கென்று இனியா பையன் பிறக்கப் போகிறான். அவள் யாருக்கு என்பதை ஆண்டவன் அன்றே நிர்ணயித்துவிட்டான். அவளுக்கென்று பிறந்தவன் அவள் வீடு நோக்கி நடைக்க தொடங்கிவிட்டான்.
அன்று பவுர்ணமி நிலவு வீட்டுக்குள்ளேயும் ஒளி வீசத் தொடங்கியது. அந்த நிலவொளியில் தெய்வா பளிச்சிட்டாள். அவளுக்கு இப்போதுதான் உண்மையான கல்யாண களை வந்துள்ளது. அவளது கல்யாணத்தை நாமும் எதிர்நோக்கி காத்திருப்போம்.
&————-&
இத்துடன் இக்கதை நிறைவேடைகிறது. படித்து ரசித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இனி அடுத்த சிற்றொடர் கதையுடன் சந்திக்கிறேன். அதுவரை அவ்வப்போது என்னடைய சிறு கதை வெளிவரும்.
அன்புடன்
கடையம் பாலன்.