May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா வைரஸ் பீதியில் நொய்டாவில் 2 பள்ளிகள் மூடல்

1 min read
Seithi Saral featured Image
2 schools shut down in Noida due to corona virus panic

3.3.2020

டெல்லி : கொரோனா வைரஸ் பீதியில் டெல்லியை அடுத்த நொய்டாவில் 2 தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

கோவுதம் புத்தர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பள்ளிக்கு உடனடியாக 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதே போன்று 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட டெல்லி நபரின் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நோய்டாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் பங்கேற்றனர்.

இதில் அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நொய்டாவில் 2 தனியார் பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்களை தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கொரோனா பாதிக்கப்பட்ட டெல்லி நபருடன் தொடர்பில் இருந்த ஆக்ராவைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.