சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவிட்ட ஓட்டல் அதிபர் கைது
1 min read3.3.2020
ஈரோடு பாப்பாத்திகாடு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் மகன் யோகேஷ்வரன் (35). திருமணமாகாதவர். இவர், ஈரோடு மேட்டூர் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்தாண்டு இவர், தனது பேஸ்புக் கணக்கில் சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் போட்டோ, வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பிரகாஷ் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பேஸ்புக் கணக்கில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அது யோகேஷ்வரனின் சிம்கார்டு என உறுதி செய்யப்பட்டது. அவர், பேஸ்புக் கணக்கை பாலியல் நோக்கத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தியதும், குழந்தைகளை பாலியல் கற்றலுக்கு தூண்டும் வகையிலும் பயன்படுத்தி சமூக சீர்கேட்டிற்கு காரணமாக இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, வீரப்பன்சத்திரம் போலீசார் யோகேஷ்வரன் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் (ஐடி) உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.