June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்திற்குள்ளும் புகுந்த கொரோனா வைரஸ்; தேவை விழிப்புணர்வு

1 min read
Seithi Saral featured Image
Coronavirus virus in Tamil Nadu

8/3/2020

தமிழகத்தை சூழ்ந்திருந்த கொரோனா வைரஸ் இப்போது தமிழ்நாட்டுக்குள்ளும் புகுந்துவிட்டது.

கொரோனா

தொழில் துறையிலும், வல்லரசு தரத்திலும் போட்டிப்போடும் சீனி கொரோனா வைரசிலும் முன்னிலை பெற்று உள்ளது. அங்கு தோன்றி அந்த நாட்டை சீர்குலைத்து வருகிறது, இந்த வைரஸ் இதுவரை அங்கு 3,097 பேர் பலியாகி உள்ளனர். நேற்று (சனிக்கிழமை) மட்டும் 27 பேர் இறந்திருக்கிறார்கள். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த நாட்டில் இருந்து இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 94 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

நேற்று வரை (சனிக்கிழமை) கொரோனா வைரஸ் 1 லட்சத்து 2 ஆயிரம் பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651-ல் இருந்து 80,696-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் கொரோனாவுக்கு 413 பேர் பலியாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்குள்

இந்த கொரோனா தமிழக்திற்கும் வந்துள்ளது. காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 45 வயது என்ஜினீயர் ஓமன் நாட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 27-ந் தேதி காய்ச்சல் இருமல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 4-ந் தேதி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்ட அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் உள்ள சிறப்பு வார்டுக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த கொரோனாவை தடுக்க எத்தனையோ விழிப்புணர்வை அரசு மேற்கொண்டாலும் அது நம் நாட்டுக்குள் புகுந்துவிட்டது. ஒருரை இந்த நோய் தாக்கி 24 நாட்களுக்கு பிறகுதான் தெரிய வரும் என்பதால் எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தொட்டால் தொற்றிக் கொள்ளும்

இந்த நோய் காற்றில் பரவாது. ஆனால் இந்த நோய் கிருமி உள்ள எச்சில் மூலம் எளிதில் பரவுகிறது. இந்த நோய் தாக்கிய ஒருவர் தும்மினால் அந்த நீர்துளி யார் மீதாவது பட்டாலும் அந்த நீர்துளி விழுந்த இடத்தை தெரியாமல் தொட்டு பின்னர் நம் கைகளால் முகத்தை துடைத்தாலும் பரவிவிடும்.எனவேதான் கண்டகண்ட இடங்களில் தொட வேண்டாம் என்றும், அடிக்கடி சோப்புபோட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று நம் நாட்டு சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக வைட்டமின் சி சத்துநிறைந்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிட்டால் இந்த நோய் நம்மை தாக்காது என்றும் அப்படியே தாக்கினாலும் நம்மை ஒன்றும் செய்யாது என்றும் சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குழந்தைகளை கொல்லாத கொரோனா

இந்த கொடூர கொரோன வைரஸ் குழந்தைகளை கொல்வது இல்லை. அவர்களை தாக்கினாலும் குழந்தைகள் உயிர் பிழைத்துக் கொள்கிறார்கள். இது அறிவியல் கண்டுபிடிப்பை மீறிய ஆச்சரியம்தான்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.