அலும்பு பண்ணும் நடிகர் -ஓட்டம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்
1 min read
சமீபகாலமாக சீக்கிர நடிகரின் அலும்புகள் தாங்க முடியவில்லை என தயாரிப்பாளர்கள் அழுவதாக கோலிவுட் வட்டாரங்கள் ரகசியமாக பேசி வருகின்றனர். துணை நடிகர் கதாபாத்திரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நாயகர் ரேஞ்சுக்கு வளர்ந்துள்ளார் அந்த சீக்கிர நடிகர்.
ஒருவிதத்தில் இவரைப்போல் புத்திசாலி யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். தான் இருக்கும் இடத்தை உபயோகித்துக் கொண்டு தற்போது முன்னணி இடத்தில் இருக்கிறார். அதை யாரும் தப்பு சொல்ல முடியாது.
ஆனால் சமீபகாலமாக நடிகரின் நடவடிக்கைகளில் சற்று மாறுதல் ஏற்படுவதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசுகின்றன. ஏற்கனவே முன்னணியில் இருக்கும் இரண்டு நடிகர்களுக்கு அடுத்து இவர்தான் என்று பலர் கூறி வருவதால் தற்போது தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு ஏற்றி விட்டாராம்.
கடைசியாக சூப்பர் ஹீரோ வேடத்தில் நடித்த படம் ஒன்று மண்ணைக் கவ்வியது அனைவரும் அறிந்ததே. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம். அதை சரிகட்டும் வகையில் தான் தற்போது அதே தயாரிப்பாளருக்கு வேறொரு படம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு இவரின் சம்பளம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நடிகரின் பேச்சுதான் சகித்துக் கொள்ளவே முடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். எல்லாருமே கஷ்டப்பட்டுதான் சினிமாவுக்குள் முன்னணியில் இருக்கிறார்கள் என்றும், இவர் மட்டும்தான் போராடி போராடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியதாக பந்தா பண்ணிக் கொள்வது கொஞ்சம் கூட சரியில்லை என்று கூறி வருகின்றனர்.
இதை ஒரு மேடையில் கூறினால் பரவாயில்லை ஒவ்வொரு மேடையிலும் கூறி வருவது மற்ற நடிகர்களை நேரடியாக தாக்குவது போல் இருக்கிறது எனவும் சிலர் டென்சனில் உள்ளனர். போகிற போக்கில் சீக்கிரம் நடிகர் 50 கோடி சம்பளம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இருக்கிறவரை சுருட்டிக்கொண்டு செட்டிலாகி விடலாம் என செம ஐடியாவில் வலம் வருகிறாராம் அந்த சீக்கிர நடிகர்.