June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காதல் மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த வாலிபர்

1 min read
Seithi Saral featured Image
A married man cheating on his wife

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அப்துல்லாபுரத்தைச் சேர்ந்தவர் தியாகு(26), இவரது மனைவி சுமதி(26). செய்யாறு சிப்காட் ஷூ கம்பெனியில் வேலை செய்து வரும் இவர்கள் காதலித்து 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த 2ம்தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற தியாகு, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, தூசி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், செய்யாறு சிப்காட் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை கிராமத்தை சேர்ந்த சங்கவி(23) என்பவரை, தியாகு காதலித்து 2வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து சங்கவி மாயமானதாக அவரது பெற்றோர் காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தூசி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.