டாஸ்மாக் வசூல்.. மிரண்டு போன நீதிமன்றம்- மீண்டும் மூட உத்தரவு
1 min read
8/5/2020
தமிழகத்தில் மட்டும் கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 தொட்டுள்ளது. கிட்டத்தட்ட 6000 பேரை கொரோனா பாதித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 1605 பேர் குணமடைவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகும் சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்ததற்காக பல எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மையம் மற்றும் எதிர்கட்சியான திமுக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாளை முதல் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் மது விற்றுக் கொள்ளலாம் என்ற அறிக்கையும் விடப்பட்டுள்ளது.
நேற்று தமிழக அரசு ஒரே நாளில் 172 கோடி வருமானம் ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் அரண்டு போய் உள்ளனர். ஆனாலும், டாஸ்மாக் திறந்ததால் அடிதடி, விபத்து என்று திருச்சியில் மட்டும் 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் டாஸ்மாக் மூடப்படுவதால் குடிமக்களுக்கு பெரும் கவலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஏற்கனவே மதுபாட்டில்களை ஸ்டாக் செய்து வைத்து விட்டனர். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை எங்கேயுமே ஒயின் ஷாப் திறக்கப்பட மாட்டாது.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு வருமானத்தை ஈட்டுவதற்காக ஒயின்ஷாப்பை திறந்தது மக்களுக்கு செய்த துரோகம் என்று சமுக வளைத்தளத்தில் விவாதங்கள் அதிகரிப்பதால் பலன் கிடைத்து விட்டது என்பது உண்மைதான்.
இதனை தடுத்து நிறுத்தும் வகையில் எதிர்க்கட்சி செயல்பட்டது பாராட்டுக்குரியது. தமிழக அரசு மது விற்பனையை ஆன்லைன் மூலம் கொண்டு வந்தால் வருமானம் ஈட்டுவது மட்டுமல்லாமல் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
அதையும் தாண்டி வாடகை, தொழிலாளர்களுக்கான ஊதியம் போன்ற அனைத்து செலவுகளையும் குறைத்துவிட்டு வருமானத்தை இரட்டிப்பாக அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.