June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கிருபானந்தவாரியாரின் நகைச்சுவை தோரணம்-2

1 min read

k
Krishnananda Warrior’s Joke-2

22-5-2020

 திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற உடன் எல்லோர் மனதிலும் நினைவுக்கு வருவது அவர் நெற்றி நிறைய அணிந்திருக்கும் திருநீரு தான். அது அவரது அடையாளமாகவே திகழ்ந்தது. அவருக்குப்பின் நெற்றி நிறைய சாம்பல் அணிந்தவரைப் பார்ப்பது அரிது. நீரில்லா நெற்றி பாழ் என்பதை எடுத்துச் சொன்னவர்.

இறை நம்பிக்கை இல்லாத ஒருவர்- வாரியார் சுவாமிகளின் பிரசங்கம் எல்லாம் பிடிக்காத ஒருவர் தற்செயலாக வாரியார் சுவாமியைப் பார்க்க நேர்ந்தது. உடனே அவரைக் கேலி செய்யும் நோக்கில் “சாமி என்ன மண்டை முழுவதும் சுண்ணாம்பு அடித்து இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.வாரியார் சுவாமிகள் சற்றும் தயங்காமல் “தம்பி வீட்டிற்குத்தான் வெள்ளை அடிப்பார்கள். குட்டிச் சுவருக்கு யாரும் வெள்ளை அடிப்பதில்லை. இங்கு அறிவும் அருளும் அத்துடன் இறைவனும்  குடியிருக்கிறான். எனவே வெள்ளை அடித்து இருக்கிறேன்” என்று தன் தலையைச் சுட்டிக்காட்டி சொன்னபடியே “தாங்கள் தலையில் வெள்ளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார். அந்த மனிதர் தலை கவிழ்ந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.