இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா
1 min readCorona to 8,171 people in India One day
2-5-2020
இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரே நாளில் 204 பேர் கொரோனாவுக்க இறந்துள்ளனர்.\
8,171 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. கொரோன பரவல் குறித்து தினமும் காலையில் மத்திய சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9:15 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது.
204 பேர் சாவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்தது.
அதேநேரம் ரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் ஆஸ்பத்தரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக…
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக (அடைப்புக் குறிக்குள் இறந்தவர்களின் எண்ணிக்கை) வருமாறு:-
மராட்டியம் – 70,013 (2,362)
தமிழ்நாடு – 23,495 (184)
டெல்லி – 20,834 (523)
குஜராத் – 17,200 (1,063)
ராஜஸ்தான் – 8,980 (198)
மத்திய பிரதேசம் – 8,283 (358)
உத்தர பிரதேசம் – 8,075 (217)
மேற்கு வங்காளம்- 5,772 (325)
ஆந்திரா – 3,783 (64)
கர்நாடகா- 3,408 (52)
தெலுங்கானா – 2,792 (88)
கேரளா – 1,326 (10)
புதுச்சேரி- 74 (0)