சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம்- முதலமைச்சர் விஜய் வழங்கினார்
1 min read
Medals for outstanding police personnel – Chief Minister Vijay presented them.
31.7.2026
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி வருகிறார்.
2023, 2024, 2025 ஆண்டுககான 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.
இதில், ஏடிஜிபி மகேஷ்வர் தயார், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காஞ்சிபுரம் எஸ்பி அரவிந்த் ஆகியோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்.
ஜஜிக்கள் லோகநாதன், நரேந்திரன், பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.
ரெயில்வே டிஜிபி வன்னியபெருமாள், சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.
அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்திம் மைதானத்தில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.
காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.
முன்னதாக, பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.