July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பூட்டிக்கிடக்கும் சிவகுமார் வசித்த வீடு

1 min read
The house where Sivakumar lived 55 years ago

17-6-2020

நடிகர் சிவகுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த வீட்டை அவர் சென்று பார்த்தார். அந்த வீடு தற்போது பூட்டியே கிடக்கிறது.

நடிகர் சிவகுமார்

நடிகர் சென்னைக்கு ஓவியராக வேண்டும் என்ற ஆசையில்தான். சென்னை பெரிய மேட்டில் உள் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். அந்போது அவர் வரைந்த படங்கள் ஏராளம்.
அதன்பின்னர்தான் திரையுலகத்திற்குள் புகுந்துள்ளார்.
சிவகுமார் 55 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்து அவர் வசித்த வீட்டின் முன்னால் புகைப்படம் எடுத்த படத்தை தற்போது இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

புகைப்படத்தின் கீழே, “1958 முதல் 1965 வரை மாதம் ரூ.15 வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு இது. 7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவைதான் எனது அத்தனை ஓவியங்களும். இந்தியாவில் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500. குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள். பொன்னான நாட்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.


பூட்டிக் கிடக்கிறது

இது குறித்து சிவகுமார் கூறும்போது, “சென்னையில் 55 வருடத்துக்கு முன்பு 7 வருடங்கள் நான் வாழ்ந்த இந்த வீட்டை என்னுடைய தாஜ்மகால் என்பேன். இந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆசைப்பட்டேன். எனது மனைவியுடன் சென்று பார்த்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த வீடு அப்படியேதான் உள்ளது. யாரும் குடியில்லாமல் பூட்டிக்கிடக்கிறது.” என்றார்.‘

முதலில் அந்த வீடு நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கு கூட தெரியாதாம். இதையடுத்து சமீபத்தில் ஒரு நாள் இரவில், முகக்கவசம் அணிந்துக்கொண்டு அவர்களுடன் சென்று இந்த வீட்டைக் காண்பித்திருக்கிறார் நடிகர் சிவகுமார். அவர் மனைவியும் அந்த வீட்டைப் பார்க்கவில்லையே என்று கூறியுள்ளார். இதனால் பகலில் அந்த வீட்டுக்குப் போய் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.