படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறிய காதலன் -கடுப்பில் நடிகை
1 min read
20.6.2020
Actress in anger over boyfriendஒரே ஒரு காதல் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸான மூன்று நாயகிகளில் ஒருவர் தான் அந்த பிரபல நடிகை. தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அந்த நாயகிக்கு காதலர் ஒருவர் இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நாயகியின் பாதுகாப்புக்காக படப்பிடிப்பு தளங்களில் டேரா போட்டு கொள்கிறாராம் அந்த காதலன்.
நாயகியும் பாடிகார்ட் செலவும் மிச்சம் என காதலரை கூட்டிக்கொண்டு சுற்றி வருகிறார். இதனால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.
நடிகைக்கு செலவு பண்ணவது மட்டுமில்லாமல் நடிகை கூட்டிவரும் ஆளுக்கெல்லாம் செலவு பண்ண முடியாது என செம்ம காண்டாகி விட்டார்களாம். அதுவும் படப்பிடிப்பு தளத்தில் அந்த நடிகையின் காதலர் பண்ணும் பந்தா தாங்க முடியவில்லையாம்.
சினிமா என்றால் கட்டி பிடிக்கணும், கிஸ் அடிக்கணும் எல்லாம் பண்ணனும் தானே. ஆனால் அந்த காதலரும் தன்னுடைய காதலியை யாரும் தொட்டு நடிக்கக் கூடாது என படப்பிடிப்பு தலங்களிலேயே சண்டைக்கு போகிறாராம்.
அதுவும் சமீபத்தில் வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்கும்போது தயாரிப்பாளர்களை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கி விட்டாராம் அந்த காதலன். அந்த நாயகியும் இதைக் கண்டு கொள்ளவில்லையாம்.
இதனை மற்ற தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்க உடனடியாக இந்த நாயகியை கமிட் செய்திருந்த அனைத்து படத்தையும் உடனடியாக ரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார் அந்த நாயகி. பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அந்த காதலன் மீது செம டென்ஷனில் இருக்கிறார் அந்த நாயகி.