June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

உதவிக்கு கிடைத்த தண்டனை- ஒரு லாரி டிரைவரின் உருக்கம்

1 min read
Punishment for help- Pain of a lorry driver

8-7-2020

கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த நேரம். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனாலும் மளிகைக்டைகளும் காய்கறிக்கடைகளும் மட்டும்தான் திறந்திருந்தன. இந்தக் கடைக்காரர்கள் மட்டும் ஓரளவு வருமானத்தை கண்டார்கள். மற்ற ஏழைகள், நடுத்தரவாதிகள் கூட இன்னும் சில நாட்கள் தொடர்ந்தால் வயிறுக்கு என்ன செய்ய என்று யோசிக்கும் காலம்.

அப்படி ஒரு காலத்தில் காவல்துறையின் பணியை நாம் போற்றத்தான் வேண்டும்.  அதேநேரம் சாத்தான்குளத்தைப்போல் சட்டத்தை கையில் எடுத்த ஒருசில போலீசாரால் அந்த துறைக்கே இழுக்கு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அப்படி ஒரு நிகழ்வை லாரி டிரைவர் கடையம் சரணவன் இங்கே விளக்குகிறார்…

எனது நண்பர் பாலகிருஷ்ணனும் லாரி டிரைவர்தான். அவர் ஓட்டும் லாரி அகில இந்தியாவுக்கு சென்று வருவதற்கான அனுமதியை பெற்று இருந்தது. நண்பரிடமும் ஊரடங்கு காலத்தில் வாகனம் ஓட்டுவதற்கான அடையாள அட்டை இருந்தது.

 ஒரு நாள் திருநெல்வேலியில் இருந்து அரிசி லோடு ஏற்றி காஷ்மீர் சென்றார். இயற்கை சூழ்நிலை, மக்களின் வாழ்க்கை, தட்பவெப்ப நிலை எல்லாமே நேர் எதிர்மறையான பகுதி அது. மிகவும் கஷ்டப்பட்டு லாரியை அங்கு ஓட்டிச் சென்றார். அங்கு உள்ள கம்பெனியில் லோடை இறக்கி விட்டு மறு லோடு ஏற்றுவதற்காக காத்திருந்தான்.

ஊரடங்கு என்பதால் சாப்பாட்டை டிரைவர்களே தயார் செய்து கொள்ள வேண்டும். எந்த நிறுவனமும் அவர்கள் சாப்பாட்டை பற்றி கவலை கொள்வதில்லை. காவல்துறையும் போலீசாரை ஒரு கிள்ளுக்கீரையாகத்தான் நினைப்பார்கள்.

 எனவே லாரி அருகேயே அடுப்பை கூட்டி சமையல் செய்து அவரும் கிளீனரும் சாப்பிட்டனர். அவர்கள் லாரிக்குப் பின்னால் போலீசாரின் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முதியவர் ஒருவர் குழிவிழுந்த கண்களோடு தள்ளாடி தள்ளாடி அங்கே வந்தார். அவர் போலீசாரிடம் சென்று பசி என்று சொல்லி சாப்பாடு கேட்டார். எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்குமூ அந்த போலீஸ்காரருக்கு அந்த முதியவர் மீது இரக்கம் வரவில்லை.  முதியவரை துரத்துகிறார்.

அந்த முதியவருக்கோ பசி அடக்க முடியவில்லை. நண்பருடைய லாரி அருகில் வந்து அவரது முகத்தை ஏக்கத்தோடு பார்க்கிறார். அவரை கண்ட என் நண்பனுக்கு கண்களில் கண்ணீர் பொங்கியது. அந்த முதியவரை அழைத்து ஐயா இங்கு வாருங்கள் என்று கூறி சாப்பாடு கொடுகிறார். முதியவரின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது நண்பரின் கண்களில் வடிந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறியது.

உணவு உண்ட முதியர், தம்பி எனது மகன் ஒரு போலீஸ் ஆபிஷர்தான்.  அதனால் தான் அவர்களிடம் கேட்டேன் என்று கூறினார்.

 ஒரு டிரைவரிடம் உள்ள மனதுகூட அந்த போலீசிடம் இல்லையே என்றார். நீ நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.

முதியவர் போன பிறகு அந்த போலீஸ்காரர் வந்து நண்பரை குடைந்து எடுத்துவிட்டார். வன்டிக்கான ரெக்கார்டு எல்லாம் எடுத்து வா என்று அதட்டினார். என் நண்பரோ எதற்கு என்று கேட்க, அவருக்கு எதற்கு சாப்பாடு கொடுத்து எங்களை அவமான படுத்தினாய் என்று சொல்லி அவரது லைசன்ஸ் புடுங்கி விட்டார். மேலும் வன்டியின் மேல் நோ பார்க்கிங் என்று கேஸ் பைல் பன்னி  ரூ.2000 அபராதம் வசுலித்த பிறகே லைசன்ஸ் ,ஆர்.சி, புத்தகத்தை திருப்பி கொடுத்தார்.

முதியவருக்கு செய்த உதவிக்கு போலீசார் கொடுத்த பரிசு அபராதம். அன்றை தொழில் லாபம் கூட இரண்டாயிரம் ரூபாய் இருக்காது. எவ்வளவு நஷ்டம் என்று நினைத்துப்பாருங்கள்.

ஓட்டல்கள் திறக்காத நிலையில் சாப்பாடு கிடைக்காமல் அல்லல் படும் முதியவருக்கு உதவி செய்ய வேண்டிய போலீஸ், உதவி செய்யாததோடு உதவி செய்தவரை தண்டித்தது மன்னிக்க முடியாத குற்றம்.

இந்த உலகில் தர்மம் செய்வது ஒரு குற்றமான நினைத்து என் நண்பன் வேதனை அடைந்தார். அதை கேட்ட நானும் வேதனை கொன்டேன்

இந்த உலகில் உள்ள அனைத்து டிரைவரும் நல்லவர்கள் தான்.

லாரி டிரைவர்கள் என்றால் பெரும்பாலான போலீசார் ஏளனமாக நினைப்பார்கள். ஏன் சில பொதுமக்களும்கூடு அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை. ஆனால் இந்தியா முழுவதும் சுற்றிவரும் ஒரு லாரி டிரைவருக்குத்தான் மனிதர்களை புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். அவர்களுக்குத்தான் உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

இதுவரை புரியாதவர்கள் எங்களை புரிந்தால் நன்றி. இப்படிக்கு சரவணன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.