April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

சூடான் கலவர பூமியானது எப்படி? இதுவரை 20 லட்சம் பேர் பலி

1 min read

How is Sudan a land of unrest? So far 20 lakh people have died

19.4.2023
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் தப்போது கலவரம் மோதல் நிலவுகிறது. அங்கு ராணுவத்தினருக்கும் துணை ராணுவ படையினருக்கும் நடக்கும் மோதலில் 270 பேர் இறந்துள்ளனர். இதில் ஒரு இந்தியரும் அடங்குவார்.
அந்த நாட்டில் கலவரம் உருவானது இப்போது அல்ல. அதன் துயர வரலாறை காணலாம்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சூடான் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. 1956-ல் சூடான் விடுதலை பெற்றது. அந்தச் சுதந்திரதுக்கு முன்னதாகவே தெற்கு சூடான், வடக்கு சூடான் என்ற சர்ச்சை நிலவிவந்தது. 1958, 1969 ஆகிய ஆண்டுகளில் அங்கே பெருமளவில் உள்நாட்டுக் கிளர்ச்சி நடந்தது. 1972-ல் அடிஸ் அபாபா ஒப்பந்தத்தின்படி தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
பின்னர் 1983-ல் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது. காரணம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த ராணுவம் முஸ்லிம் ஷாரியா சட்டத்தை திணிக்க முயன்றது. கிறிஸ்துவர்களும், அனிமிஸ்ட்ஸ் என்ற மதத்தவரும் அதிகம் இருந்த தெற்கு சூடானில் இந்தத் திணிப்பு கிளிர்ச்சியாக வெடித்தது. பின்னர் 1989-ல் ஆளுங்கட்சியும் தெற்கின் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தின.

அப்போது அரசியல் ரீதியாகவும், மதம் சார்ந்தும், ராணுவம் ரீதியாகவும் பலம் பொருந்தியவராக இருந்த ஒமர் அல் பஷீர் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி ராணுவத் தளபதியாகவும், பிரதமராகவும் பிரகடனம் செய்து கொண்டார். ஆனால், 1996-க்குப் பின்னர் அல் பஷீர் தொடர்ந்து தன்னை அதிபராக நிலைநிறுத்திக் கொண்டார். 1996-க்குப் பின்னர் அங்கு தேர்தலே நடைபெறவில்லை.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இதன்பின் புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. இதனால், சூடான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

20 லட்சம் பேர் சாவு

2003-ல் பூதாகரமாக வெடித்த கலவரங்களுக்குப் பின்னர் சூடானில் இதுவரை 40 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 20 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன அழிப்புச் சம்பவங்கள் இன்றுவரை நடந்தேறி வருகிறது. அங்கே எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் பசி, பட்டினி, சுத்தமான குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்றுமதி

சூடானில் விவசாய நிலம் நிறைய இருந்தாலும் கூட அங்கே தங்கச் சுரங்கங்களும், எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகளும் நிறைய இருக்கின்றன. சூடானில் பருத்தி, நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. சூடானின் ஏற்றுமதி வருவாயில் 73 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கின்றது. எல்லா வளமும் இருந்தும் சூடான் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது. காரணம், அங்கே நிலையான ஆட்சி இல்லை. ஜனநாயக அரசு இல்லை. சிறு குழுக்களும், கிளிர்ச்சியாளர்களும், ராணுவமும்தான் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
விவசாயம், வர்த்தகம், எண்ணெய் வளம் எல்லாமே ராணுவம் தனது அதிகாரத்தை குவித்துவைத்துக் கொள்வதற்கான ஆதாரமாக சுருட்டிக் கொள்ளப்படுகிறது. பசியும் பட்டினியும் நோயும் வறட்சியும் மட்டுமே மக்களுக்கு கிடைக்கிறது. சூடானுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இன்றளவும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.