June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

“கொரோனாவில் இருந்து இன்னும் விடுபடவில்லை” ; அமிதாப்பச்சன் விளக்கம்

1 min read
"Not yet released from the corona"; Amitabh Bachchan Description

23-7-2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அமிதாப்பச்சன் குணம் அடைந்ததாக வந்த செய்தி வதந்தி என்றும் தான் இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை என்று ம் அமிதாப்பச்சனே கூறியுள்ளார்.

அமிதாப்பச்சனுக்கு கொரோனா

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா ஆண்டி முதல் அரசன் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தி சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதப்பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த11ம் தேதி கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் மும்பை நானாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அவர்களது மகள் ஆராதயாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அமிதாப் குடும்பத்தினர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர சிறப்பு ரசிகர்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளனர்.

வதந்தி

இந்த நிலையில் தற்போத அமிதாப் பச்சனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென முடிவுகள் வந்துள்ளதாகவும் எனவே விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் செய்திகள் வெளியானது.
இதே போல், அபிஷேக் பச்சனின் உடல்நலம் சீராக இருப்பதாகவும் அவரும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த செய்தி வதந்தி என்று அமிதாப்பச்சனே கூறியுள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில் கூறும்போது, “இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது நான் இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.