தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா; தூத்துக்குடி 349 . திருநெல்வேலி 191, தென்காசி 112
1 min readTamil nadu 6.993 person affected for corona one day
27-7-2020
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் 349 பேருக்கும் திருநெல்வேலியில்191 பேருக்கும், தென்காசியில் 112 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
6,993 கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை கொரோனா பற்றிய தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( திங்கட்கிழமை) வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது.
77 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவால் இன்று(திங்கட்கிழமை) மட்டும் 77 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 3,571 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இன்று 5,723 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,526 லிருந்து 1,62,249 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 61,342 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 23,24,080 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 63,250 மாதிரிகளும், இதுவரை 24,14,713 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில்
சென்னையில் மேலும் 1,138 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 2,032 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் இதுவரை 1,539 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1,138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. செங்கல்பட்டு-448, விருதுநகர்-338 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா
மாவட்ட வாரியாக…
இன்று கொரோனா பாதிப்பு எண்ணிகை வருமாறு:-
இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
அரியலூர் 48
செங்கல்பட்டு 448
சென்னை 1138
கோயம்புத்தூர் 313
கடலூர் 109
தருமபுரி 32
திண்டுக்கல் 133
ஈரோடு 27
கள்ளக்குறிச்சி 238
காஞ்சிபுரம் 362
கன்னியாகுமரி 239
கரூர் 7
கிருஷ்ணகிரி 60
மதுரை 249
நாகப்பட்டினம் 22
நாமக்கல் 38
நீலகிரி 39
பெரம்பலூர் 21
புதுக்கோட்டை 98
ராமநாதபுரம் 54
ராணிப்பேட்டை 273
சேலம் 190
சிவகங்கை 48
தென்காசி 112
தஞ்சாவூர் 115
தேனி 280
திருப்பத்தூர் 53
திருவள்ளூர் 474
திருவண்ணாமலை 267
திருவாரூர் 67
தூத்துக்குடி 349
திருநெல்வேலி 191
திருப்பூர் 39
திருச்சி 188
வேலூர் 184
விழுப்புரம் 139
விருதுநகர் 338
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 3
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 8
ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
மொத்தம் 6,993