புதிய கல்விக் கொள்கைக்கு குஷ்பு வரவேற்பு ; “கட்சி தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோ அல்ல”
1 min readKhushboo welcomes new education policy; "Not a robot shaking its head at party leadership"
30-7-2020
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்றுள்ளார். அவர் கூறும்போது தான்
தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோ அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய மந்திரி சபை நேற்றுஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரோபோ அல்ல….
புதிய கல்வி கொள்கையில், கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது நிலைப்பாடு வேறுபடுகிறது. இதற்காக ராகுலிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
நான் உண்மையை தான் பேசுகிறேன். நான் கட்சி தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோ அல்ல. கட்சித் தொண்டர் என்பதை விட நாட்டின்குடி மகனாக எனது கருத்தை பதிவிட்டுள்ளேன். புதிய கல்வி கொள்கையில் சில இடங்களில் குறை இருப்பினும், இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்.
எதிர்க் கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பது. ஒன்றிணைந்து செயல்படுவதே அரசியல். இதனை பா.ஜ. புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் பாரதீய ஜனதாவில் இணைவேன் என்பதில் உண்மை இல்லை.
இவ்வாறு குஷ்பு கூறினார்.