June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்காவில் பெண் ஆராய்ச்சியாளர் கொலை; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்

1 min read


Indian descent Female researcher murdered in US

4-8-2020

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியான பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்டார்.

பெண் ஆராய்ச்சியாளர்

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ப்ளானோ நகரில் வசித்து வந்தவர் ஷர்மிஸ்தா சென்(வயது43). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஷர்மிஸ்தா சென் உயிரியல் தொடர்பான படிப்பில் ஆராய்ச்சி செய்து வந்தார். புற்றுநோயாளிகளுடன் இணைந்து பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 1-ந் தேதி பூங்கா ஒன்றின் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அ வர் கடுமையாக தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

அன்றைய தினம் அவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

ஒருவர் கைது

இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 29 வயது மதிக்கத்தக்க பகரி அபியோனா மொன்கிரீப் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஷர்மிஸ்தா சென் தடகள வீராங்கனையும் கூட. இவர் பூங்கா பகுதியில் தினமும் ஜாக்கங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த நேரத்தில்தான் அவர் கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.