June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

102 வயது சினிமா கவிஞர் பி.கே.முத்துசாமி மரணம்

1 min read

cinima poet P/K. Muthusamy passes away

11-8-2020

சினிமாவுக்கு பாடல் எழுதிய 102 வயது பழம்பெரும் கவிஞர் பி.கே. முத்துசாமி மரணம் அடைந்தார்.

வெண்பா கவிஞர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பி.கே.முத்துசாமி. கவிஞராக இவர் வெண்பா எழுதுவதில் சிறந்தவர். பொதுவாக செய்யுளில் வெண்பா எழுதுவதுதான் கஷ்டம் என்பார்கள். ஆனால் இவர் நிறைய வெண்பா பாடலை எழுதியுள்ளார். எனவே இவரை வெண்பா கவிஞர் என்று கூறுவார்கள்.
இவர் சினிமாவுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். கடந்த 1958-ம் ஆண்டு வெளியான “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற சினிமா படத்தி்ல் இடம் பெற்ற ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’ என்ற பாடலை எழுதியவர் இவர்தான். இந்த
பாடல் மூலம் இவரது புகழ் தமிழகம் முழுவதும் பரவியது.
இவர் வெண்பா கவிதைகளோடு மற்ற கவிதைகள், புத்தங்கள் எழுதியுள்ளார்.

மரணம்

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பி.கே. முத்துசாமி இன்று(செவ்வாய்க்கிழமை) மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.