பிள்ளையாரின் அறுபடை வீடுகள்
1 min read
Arupadai veedu for pillaiyar
21-8-2020
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உண்டு. அந்த ஆறு தலங்களும் முருகனின் வரலாற்றில் முக்கியத்துவமான நிகழ்வுகள் நந்துள்ளன. முருகனுக்கு இருப்பது போல விநாயருக்கும் அறுபடை வீடுகள் உள்ளன.
திருவண்ணாமலை
இதில் முதல்படை வீடாக திருவண்ணாமலை போற்றப்படுகிது. பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள பிள்ளையாருக்கு அல்லல்போம் விநாயகர் என்று பெயர்.
விருத்தாச்சலம்
கடலூர் மாவட்டம் விருத்தாலச்சலம் 2-ம் படை வீடாக போற்றப்படுகிறது. இந்த ஊரில் இருக்கும் விருத்தகிரீசுவரர் கோவிலில் உள்ள விநாயகருக்கு ஆழத்து பிள்ளையார் என்று பெயர். இவரை வழிபட பள்ளத்தில் இறங்கு செல்ல வேண்டும். இந்த பிள்ளையாரை வணங்கினால் கல்வி, செல்வம், சீரான வாழ்வு கிடைக்கும்.
திருக்கடவூர்
எமனிடம் இருந்து மார்கண்டேயனை காத்த சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கடவூர் கோவில் விநாயகரின் மூன்றாம் படையாக போற்றப்படுகிறது. இங்குள்ள விநாயகருக்கு கள்ள வாரணப் பிள்ளையார் என்று பெயர். இந்த பிள்ளையாரை வணங்கினால் நீண்ட ஆயுளை பெறலாம். திருக்கடவூர் அம்மன் அபிராமியை புகழ்ந்த அபிராமிபட்டார் அபிராமி அந்தாதி பாடினார். அப்படி பாடும்போது இந்த விநாயரைத்தான் காப்பாக பாடினார்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விநாயகரின் நான்காவது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள சித்தி விநாயகர் மீனாட்சி அம்மன் சன்னதியில் நுழையும் முன்னர் இவரை தரிசிக்கலாம். மாணிக்க வாசகர் பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்கச் செல்லும்போது இந்த விநாயகரை வணங்கிச் சென்றாதாக கூறப்படுகிறது. இவரை வணங்கினால் நாம் நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம்.
பிள்ளையார் பட்டி
பிள்ளையார்பட்டி விநாயகரின் ஐந்தாம்படை வீடாக போற்றப்படுகிறது. வடக்குநோக்கு வலம்சுழி விநாயகராக அருள்பாலிக்கிறார். அவர் சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவ பூஜை செய்பவராக உள்ளார். இவரை வணங்கினால் நல்ல ஞானத்தை பெறலாம். வடக்கு நோக்கி இருப்பதால் நல்ல செல்வத்தையும் அருள்வார். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து இவரை வழிபடலாம்.
திருநாரையூர்
திருநாரையூர் விநாயகரின் ஆறாம்படை வீடாகும். சவுந்தரநாதர்-திரிபுர சுந்தரி அம்மன் அருள்பாலிக்கும் கோவிலில் உள்ள பொல்லாப்பிள்ளையார் சுயம்புவாக தோன்றியவர்.