இந்தியாவுக்குள் வழிதவறி வந்த 3 சீனர்கள்; ராணுவம் மீட்டு அனுப்பி வைத்தது
1 min read
3 Chinese who strayed into India; The army rescued and sent
5-9-2020
இந்தியாவுக்கு ஒரு பெண் உள்பட 3 சீனர்கள் வழிதவறி வந்து தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை நமது ராணுவ வீரர்கள் மீட்டு அனுப்பி வைத்தனர்.
3 சீனர்கள்
இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. சீனா தனது பகுதியில் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது.
இந்த பதற்றமான சூழ்நிலையில் ஒரு பெண் உள்பட 3 சீனர்கள் வழிதவறி இந்திய பகுதிகள் வந்துவிட்டனர். அவர்கள் வடக்கு சிக்கிமில் 17,500 அடி உயர மலையில் தவித்துக் கொண்டிருந்தனர். அங்கு கடும் குளிர் நிலவியதால் அவர்கள் நடுநடுங்கிக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த சீனர்களை மீட்டு அவர்களுக்கு ஆக்சிஜன் அளித்து, உணவு வழங்கி, குளிர் தாங்கும் உடைகளையும் தந்துள்ளனர்.
பின்னர் பத்திரமாக அவர்களது நாட்டுக்குச் செல்ல உதவி செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த தகவலை ராணுவத்தின் மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டுள்ளார்.