எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கோரோனாவில் இருந்து மீண்டார்
1 min read
SP Balasubramaniam recovered from Corona
7-9-2020
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக அவரது மகன் கூறியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக கடந்த மாதம் 5-ந் தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதிக்கு பிறகு எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் மோசம் அடைந்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் நுரையீரலில் தோற்று அதிகம் ஆகி, உடல்நிலை மோசம் அடைந்தது.
இதனால் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ பொருத்தப்பட்டது. அதோடு வெண்டிலேட்டர் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன் நினைவு திரும்பியது. கடந்த வாரம் முதல் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நன்றாக தற்போது மூச்சு விடுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் இவரின் உடல்நிலை வேகமாக முன்னேறி வந்தது.
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து அவரின் மகன் எஸ்.பி.பி சரண் கூறியதாவது:-
மீண்டார்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து உள்ளது. இன்று அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. (கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார்.) அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. அதோடு எஸ்.பி.பிக்கு பொருத்தப்பட்ட வெண்டிலேட்டர் நீக்கப்பட்டுள்ளது.
அவர் ஐபேடில் கிரிக்கெட்டென்னிஸ் போ ட்டிகளை பார்த்து வருகிறார். தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார்.
இவ்வாறு எஸ்.பி.பி. மகன் சரண் கூறினார்.