தமிழகத்தில் இன்று 2,504 பேருக்கு கொரோனா; 3,644 பேர் டிஸ்சார்ஜ்
1 min readCorona for 2,504 people in Tamil Nadu today; 3,644 discharged
1/11/2020
தமிழகத்தில் இன்று 2.504 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 3,644 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மட்டும் 2,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாபாதிக்கப்பட்டவர்களில் தற்போது 20,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 3,644 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 30 பேர் இறந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.