May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு கொரோனா

1 min read

Corona for 7 thousand people in Kerala today

1/11/2020

கேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கேரளாவில் கொரோனா

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவியபோது கேரளாவில் கொரோனா பரவல் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது கேரளாவில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஆனால் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான விவரத்தை அந்த மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு:-
கேரளாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 7,025 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது.

கேராளாவில் தற்போது கொரோனாவுக்கு 89,675 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 8,511 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 48 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 28 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கேரளாவில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,512 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியம்

மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 5,369 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 83 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அந்த மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3,726 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 14 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 113 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் அந்த மாமநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது

ஆந்திரா

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரேநாளில் அந்த மாநிலத்தில் 2,618 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,25,966 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 16 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6,706 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரா முழுவதும் இன்று ஒரேநாளில் 3,509 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 95 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது 23,668 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.