May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

துப்பாக்கி குண்டு பாய்ந்து போலீஸ்காரர் சாவு

1 min read

Policeman killed by gunfire

1/11/2020

துப்பாக்கியில் தவறாகக் கைபட்டு குண்டு பாய்ந்ததால் பணியில் இருந்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ்காரர்

ஐதராபாத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஐதராபாத்தில் உள்ள ராணிகுஞ்ச் என்ற பகுதியில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) ஒரு பொதுத்துறை வங்கியினுடைய பண பெட்டகக் கட்டிடத்தின் வாயிலில் 31 வயது போலீஸ்காரார் ஒருவர் பணியில் இருந்தார்.
இன்று காலை காலை 7 மணியளவில் அவரிடம் இருந்த துப்பாகியின் விசையில் கை தவறுதலாகப் பட்டுவிட்டது.
இதனால் செல்ப் லோடிங் ரைபிள் (எஸ்.எல்.ஆர்) துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறி அவரது கன்னத்தில் பாய்ந்தது.

சாவு

இதனால் கான்ஸ்டபிள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்ட கட்டிடத்தின் பாதுகாப்புப் பிரிவின் உள்ளே இருந்த மற்ற 3 போலீசார் வெளியே வந்தனர். அவர் இறந்து கிடந்த காட்சியைக் கண்டனர். அவர் இறந்து கிடந்ததை அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பாதுகாப்பாளர் பொறுப்பிலிருந்த வேறொரு போலீஸ்காரர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்டக் காவலர் தன்னை அறியாமல் தவறுதலாக கை பட்ட நிலையில் குண்டுபாய்ந்து உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்த போலீஸ்காரர் பற்றிய மற்ற விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.