நெல்லை, தென்காசியில் கொரோனா நிலவரம்
1 min read
Corona situation in Nellai, Tenkasi
4/11/2020
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களையும் சேர்த்து இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14289 ஆக அதிகரித்தது. இன்று 28 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை மொத்தம் 13929 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 152 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று பலி இல்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 7849 ஆக அதிகரித்தது. இன்று 3 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதையடுத்து இதுவரை மொத்தம் 7651 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 43 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று பலி இல்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உள்ளது.